ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்த 4 பேர் மீது வழக்கு
- நாரைக்கிணறு ஊராட்சியை சேர்ந்த ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
- ஆயில்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சியை சேர்ந்த ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு பல பகுதிகளைச் சேர்ந்த காளை பிடி வீரர்களும், காளைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணன், ஆயில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த காளை மாடு ஒன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரிகளும் போலீசாரும் அதனை மறுத்தனர். இந்நிலையில், ஆயில்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.