உள்ளூர் செய்திகள்

தண்ணீரில் மூழ்கி முதியவர் சாவு

Published On 2022-12-19 10:27 GMT   |   Update On 2022-12-19 10:27 GMT
  • தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்
  • துணி துவைக்கும் போது சம்பவம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பேரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80). இவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை ப ார்த்த அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி இறந்த நிலையில் கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News