உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தாடிக்கொம்புவில் முற்றுகை போராட்டம்

Published On 2022-10-02 04:54 GMT   |   Update On 2022-10-02 04:54 GMT
  • பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
  • குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜ், செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் நிர்வாகம் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News