search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people protest"

    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதிக்கு உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் பிரிவு செல்கிறது. இந்த சாலைகளை மையமாகக்கொண்டு அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வருகின்ற போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசுத்தம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட பணிகள் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று கூறினார்கள்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் லீபுரம், கோவளம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், குலசேகரபுரம், நல்லூர், ராமபுரம், இரவிப்புதூர் உள்பட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயக்குமாரி லீன், ஸ்டெனி சேவியர், சிந்து செந்தில், தங்கமலர் சிவபெருமான், தேவி, சுடலையாண்டி நிலா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.
    • இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் நகராட்சி 26-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சின்னமனூர் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    குடிநீர் வினியோகம் விரைவில் சீராகும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காமலாபுரம் மற்றும் சக்கையநாயக்கனூர் பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. மேலும் குடிநீரும் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
    • மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காமலாபுரம், சக்கையனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காமலாபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது இந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காமலாபுரம் மற்றும் சக்கையநாயக்கனூர் பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. மேலும் குடிநீரும் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    இதுகுறித்து அதிகாரிகளி டம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று செம்பட்டி-கொடைரோடு செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா, கருப்பையா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சீரான மின்வினியோகம் மற்றும் குடிநீர் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • குடிமகன்கள் தொல்லையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரம் செட் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக் குட்பட்டதாகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதானமாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சாலையோர ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் குடிமகன்கள் மது குடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மிகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அணைக்கரை ப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன், போடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

    • சரியான நேரத்தில் பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்து வந்தனர்.
    • முறைப்படி இயக்கப்படாத அரசு பஸ் இன்று காலை மொட்டைய கவுண்டன்ப ட்டிக்கு வந்தபோது சிறை ப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டைய கவுண்டன் பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளதால் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில வேம்பார்பட்டி மற்றும் கோபால்பட்டிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இங்கு கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதால் தினமும் வேலை நிமித்தமாக ஏராள மான தொழிலாளர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபா ல்பட்டி வழியாக மொட்டைய கவுண்டன்பட்டி கிராமத்துக்கு காலை 6.30, 9.05, 11.30, 1.30, 3.30, 5.30 இரவு 9 மணி ஆகிய நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காததால் மாணவ-மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அவதியடைந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. பொதுமக்களும் பாதிப்பு அடைந்தனர். மேலும் ஒரு சில நேரங்களில் தொடர்ச்சியாக அரசு பஸ்கள் இயக்கப்படாமலே இருந்தன.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.இதனால் ஆத்திர மடைந்த பொது மக்கள் முறைப்படி இயக்கப்படாத அரசு பஸ் இன்று காலை மொட்டைய கவுண்டன்ப ட்டிக்கு வந்தபோது சிறை ப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார், போக்குவரத்து அதிகாரி, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் சரியான நேரத்தில் தினமும் தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உங்களது கோரிக்கைகள் மேல் அதிகாரிகளிடம் பேசி தீர்த்து வைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி கூறியதின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.அரசு பஸ்சை ஒரு மணி நேரம் பொது மக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அடிப்படை வசதிகள் கேட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.
    • போராட்டம் நடத்திய வர்களிடம் 10 நாட்களுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அதிகளவில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெரு விளக்கு, குடிநீர், கழிவு நீர் ஓடை,தடுப்புச் சுவர் உள்ளிட்டவைகளை 40 ஆண்டு காலமாக செய்து தராமல் உள்ளதை கண்டித்தும், இந்த வசதிகளை செய்து தரக் கோரி மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை யும் எடுக்காததை கண்டி த்தும் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கன்று குட்டி, பாய், சமையல் பாத்திரங்கள், விறகு, குடம் உள்ளிட்ட பொருள்களுடன் தலையில் சுமந்தவாறு சாணார்பட்டி காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி சந்திரன், ரூரல் டி.எஸ்.பி உதயகுமார், இன்ஸ்பெக்ட ர்கள் தங்க முனியசாமி, விக்டோரியா லூர்து மேரி,சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பாது காப்புணியில் ஈடுபட்டனர்.

    40 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போராட்டம் நடத்திய வர்களிடம் 10 நாட்களுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற போரா ட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கால்நடைகளை கொண்டு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • இன்று காலை பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கால்நடைகளை அவிழ்த்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 5-வது வார்டுக்கு உட்பட்ட ஊதங்காட்டுபுதூர் என்ற பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொடங்கியது.

    இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    சாலை அமைக்கும் பணிக்காக இந்த பகுதியில் ஆங்காங்கே குழி தோண்டப்பட்டும், மண் குவியல் குவியலாக கொட்டப்பட்டு இருப்பதாலும் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இதையடுத்து கால்நடைகளை கொண்டு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் கோபம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு, வளர்ப்பு நாய்களுடன் அரச்சலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று இரவு 8 மணி அளவில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளை பேரூராட்சி அலுவலகம் முன்பு கட்டி போட்டு முற்றுகை போராட்டம் செய்தனர். இதுபற்றி தெரியவந்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் விடிய, விடிய முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை அரச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. மேலும் விரைவாக தார்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கால்நடைகளை அவிழ்த்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர்.
    • சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்நிலைப் பகுதியில் உள்ள மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த கைகாட்டி, கண்ணன்புரம் போன்ற பல்வேறு பகுதி களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் வரும் வழியில் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ள தாகவும் இதனை சீரமைக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும், ஒருசில இடங்களில் பழைய குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், புதிய குடிநீர் குழாய் அமைக்க அரசிடம் நிதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனிடையே சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    • குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்
    • மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.

    இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    எனவே செட்டியார்குளம், அம்மன்குளம், பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • பழனி நகராட்சி குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
    • எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.

    பழனி:

    பழனி நகராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பெரியப்பா நகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைய டுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்ட னர்.

    அப்போது பழனி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மீட்டிங்கில் இருப்பதாகவும், பிறகு வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து அதிகாரிகளை சந்தித்து விட்டுதான் செல்வோம் என்று கூறி பழனி நகராட்சி அலுவலக வாயிலிலேயே காத்திருந்த னர்.

    நீண்ட நேரம் ஆகியும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க மறுத்ததாக கூறி ஆவேச மடைந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது:-

    பழனி பெரியப்பா நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் தற்போது 5ஜி அலைக்கற்றைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. குடியிரு ப்புகள் மட்டுமின்றி மருத்து வமனை, அங்கன்வாடி உள்ளிட்டவை உள்ள பகுதியில் அமைக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில் அதை மீறி டவர் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் கதீர்வீச்சு காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்படுவர்.

    மேலும் தற்போது அமை க்கப்படும் கோபுரமானது முதல் முப்பது அடி உயரத்திற்கு மட்டுமே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரம்பம் முதலே பலமுறை தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே செல்போன் டவர் அமை க்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்ததாக கூறினர்.

    தங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தால் விரைவில் கடுமையான போராட்டத்தில் ஈடு படப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திக்க வைப்பதாக கூறியதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    ×