search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை போராட்டம்"

    • கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
    • கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி, புத்தூர், குடிகாடு கிராமத்தில் தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மணல் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இருந்தும் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நடப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டிராக்டர் எளிமையாக கிடைக்கப்பெற்றது. தற்போது டிராக்டர் மணல் கிடைப்பதில்லை.

    ஆகவே மீண்டும் டிராக்டரில் மணல் வேண்டி கனிம வள அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சென்று முறையிட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    எனவே மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்க கோரி வருகின்ற 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணல் குவாரி முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்துவதென கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு குறு கட்டுமான பணியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

    • கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் - பழனி சாலையில் வட கவுஞ்சி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், தங்களது கிராமப் பகுதிகளை ஒட்டியுள்ள மலை கோவில்களுக்கு செல்வதற்கும், விவசாய நிலங்களில் வேலி அமைத்துக் கொள்வதற்கும் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    அத்துடன் கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து வட கவுஞ்சி பிரிவு அருகே பஸ் மறியல் போராட்டம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதை அடுத்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் வருவதற்கு போலீசாரும், வனத்துறையினரும் வருவாய் துறையின் கிராம மக்களை அழைத்தனர். இதை அடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, வனத்துறை சரகர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களை தரக்குறைவாக நடத்தும் வன ஊழியர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் உள்ளிட்டவைகளை எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது என்றும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    ஏற்கனவே இந்த பகுதியில் 15,000 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பாணை 16-வெளி வந்த பின்னர் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
    • ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது கடந்த 3 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு தலைவர் பதில் அளிக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, முனிராஜா, வசந்தி, பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தியிடம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டவில்லை என புகார்
    • போலீசார் சமரசம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் கிளை அஞ்சலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ராகினி என்பவர், சேமிப்பு கணக்கில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்.

    ராகினி, அம்மாபாளையம் கிராமத்தில் வசூல் செய்து வரும் பணத்தை சம்பந்த ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டி வந்துள்ளார்.

    இந்த நிலையில் ராகினிக்கு செங்கம் அருகே வசிக்கும் நபருடன் திருமணமானது.திருமணமான பின்னர் தபால் சேமிப்பு கணக்கில் பணம் வசூல் செய்யும் பணியை, அம்மாபாளையம் கிராமத்திலேயே செய்து வந்தார்.

    ஆனால் வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டாமல் இருந்து வந்துள்ளார்.

    இது குறித்து தகவலறிந்த சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக அலுவலர்களிடம் புகார் செய்ததன் பேரில், விசாரணை நடத்தினர்.

    இதனால் தற்போது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகினியிடம் நேரில் விசாரணை நடத்த தபால் அலுவலக அலுவலர்களிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒண்ணுபுரம் அஞ்சலகத்திற்கு வந்திருந்தனர்.

    இந்த விசாரணைக்கு செங்கம் பகுதியில் தனது கணவர் வீட்டில் வசிக்கும் ராகினி நேரில், விளக்கம் அளிக்க வந்தார்.

    அம்மாவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஒண்ணுபுரம் அஞ்சலகத்தில் வந்து ராகினியிடம் தாங்கள் கட்டிய பணத்தை வழங்கவேண்டும் என முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். தபால் அலுவலர்கள் முறைப்படி ராகினியிடம் பணம் வசூலித்து வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைப்பதாக தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது.
    • மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள், போராட்டம், மறியல், கடையடைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத்தலைவர் சிங்காரவேலன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். முற்றுகை காரணமாக சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.
    • என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் நகர் பகுதியில் உள்ள வார்டு களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.

    இந்த மெத்தனப் போக்கை கண்டித்தும், பி.டி.ஆர். கால்வாயை தூர் வார வேண்டும் எனவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனத்தை மூட வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதில் சின்னமனூர் நகர பொதுச் செயலாளர் நேதாஜி குமார் என்ற வசீகரன், நிர்வாகிகள் தர்மராஜ், பிரபாகரன், வேலு மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். போராட்டம் குறித்து அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
    • மீன்பீடி தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கும் என்றும் குற்றம்சாட்டினர்.

    பொன்னேரி:

    எண்ணூர் பகுதியை சேர்ந்த காட்டுக்குப்பம், சின்ன குப்பம் பெரியகுப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் எண்ணூர் குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மீனவ கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் கொசஸ்தலை ஆற்றில் சென்று மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து முற்றுகையிட்டனர்.

    மீன்பீடி தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கும் என்று குற்றம்சாட்டினர். அவர்களிடம் தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • முற்றுகை போராட்டத்திற்கு மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு
    • மீனவர்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    மணக்குடி காயலில் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா படகு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையில் படகு சவாரி விடுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை சந்தித்தும் மனு அளித்தனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் தலைமையில் மணக்குடி காயலில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இந்த நிலையில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் படகில் முற்றுகை போராட்டம் நடத்த திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பாரதிய ஜனதா மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் கூறுகையில், மணக்குடி காயல் பகுதியில் சுற்றுலா படகு வசதி செய்வதனால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்படும். எனவே அந்த பகுதியில் சுற்றுலா படகு வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    பள்ளம்-மணக்குடி சாலை கடந்த 10 ஆண்டகளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உடனடியாக அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மீனவர்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன வல்லூர் கொண்டக்கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயல் சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டுபுதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால், 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும், தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கூறிய மக்கள், சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சார் ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின்பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். மேலும் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து அழைத்து சென்றபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று மாலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூர் அருகே பச்சைபாளி ரோடு பகுதியில் இருக்கும் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் முற்றுகையிட வந்த நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவல கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கட்சி அலுவலகத்திற்கு வரும் நிர்வாகிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தவிர வேறு யாரும் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்தால் அவர்களை போலீசார் அனுப்பி விடுகின்றனர்.

    • மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    இதனிடையே துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 10 ஆயிரத்து 500 மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சம்பளத்தை வழங்க கால தாமதம் செய்கின்றனர் எனவும், மே மாதம் சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக துப்புரவு பணியாளர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்தும், ஊதிய பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த மதுரை கிழக்கு மண்டல உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது ஊதிய பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார். துப்புரவு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வார்டு முழுவதும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளில் ஈடுபடும் எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.

    5-ந்தேதிக்கு பதிலாக கால தாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்தவே கஷ்டமாகவே உள்ளது. மேலும் பணியில் சேரும் போது கூறிய சம்பளத்திற்கு பதிலாக குறைவாக வழங்குகிறார்கள். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இரவில் பாய் விரித்து அலுவலகத்தில் உறங்கியதால் பரபரப்பு
    • பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூச ரூ.9 லட்சமும், கழிவறை அமைக்க ரூ. 7½ லட்சம் மதிப்பீடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் இடைக்கோடு பேரூராட்சி உள்ளது. 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியின் தலைவியாக பா.ஜனதாவை சேர்ந்த உமாதேவி உள்ளார்.

    நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தற்போது இருக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூச ரூ.9 லட்சமும், கழிவறை அமைக்க ரூ. 7½ லட்சம் மதிப் பீடு செய்து கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதில் முறைகேடு உள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாமல் பேரூராட்சி தலைவி மற்றும் செயல் அலுவலர் கூட்டத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவி மற்றும் நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது.

    3 பெண் கவுன்சிலர்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தினுள் தலையணை, பாய் விரித்து தூங்கியபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×