உள்ளூர் செய்திகள்
பாளையில் வாலிபர் மோட்டார் சைக்கிள் திருட்டு
- பாளை பர்கிட் மாநகரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
பாளை பர்கிட் மாநகரத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது30). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.