உள்ளூர் செய்திகள்

கோட்டகுப்பம் நகர்மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தூய்மை பணி முகாமை தொடங்கி வைத்தார்.

கோட்டகுப்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்

Published On 2022-07-25 07:43 GMT   |   Update On 2022-07-25 07:43 GMT
  • கோட்டகுப்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • நகர்மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தூய்மை பணி முகாமை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு முகாம் கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. கோட்டகுப்பம் நகர்மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தூய்மை பணி முகாமை தொடங்கி வைத்தார். இதில் கோட்டகுப்பம் நகராட்சி ஆணையர் பானுமதி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோட்டகுப்பம் கடற்கரை பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. பொதுமக்களிடம் தூய்மை பணி விழிப்புணர்வு குறித்து சிவசக்தி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News