உள்ளூர் செய்திகள்

பணகுடி அருகே விபத்தில் முதியவர் சாவு

Published On 2022-06-18 09:42 GMT   |   Update On 2022-06-18 09:42 GMT
  • காவல்கிணறு நெடுஞ்சாலையில் சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
  • விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் அந்த நபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News