உள்ளூர் செய்திகள்

கோவையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Published On 2022-10-07 10:13 GMT   |   Update On 2022-10-07 10:13 GMT
  • தனலட்சுமி மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
  • மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை

கோைவ ராமநாதபுரம் அருகே உள்ள குணசுந்தரி நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 90). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த தனலட்சுமி திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் தனலட்சுமி சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயன்றனர்.

அதற்குள் தனலட்சுமி உடல் கருகிய நிலையில் கீழே விழுந்தார். பின்னர் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சு ஊழியர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News