உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை

Published On 2022-06-07 09:10 GMT   |   Update On 2022-06-07 09:10 GMT
  • சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • சில மாதங்களாக காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளம் ஓடைதெருவை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மனைவி வள்ளிதாய்(வயது 71).

இவர் அப்பகுதியில் உள்ள சிலை கோவில் பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

வள்ளிதாய் கடந்த சில மாதங்களாக காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News