search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sucide"

    • சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • அங்கு செந்தில், கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார்.

    துறையூர்

    பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவருக்கு திருமணமாகி சரஸ்வதி (36) என்கிற மனைவியும், 9 வயதுள்ள ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் செந்தில் துறையூர் அருகே கிழக்குவாடி கிராமத்தில் உள்ள குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு செந்தில், கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இறந்த நிலையில் இருந்த செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டக்டருக்கு வீடியோகாலில் பேசி தூக்கு கயிறுடன் சாகப்போவதாக கூறினார்
    • ஓட்ைட பிரித்து உள்ளே சென்று சடலம் மீட்பு

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாச்சியூரை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் சண்முக சுந்தரம் (வயது 28). இவர் நாச்சிபாளையம் - உக்கடம் வரை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சண்முகசுந்தரம் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    இவர் தனது நண்பர்களிடம் அடிக்கடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது நண்பரான கண்டக்டருக்கு வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாக தூக்கு கயிற்றுடன் பேசினார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவருடைய ஸ்டேட்டசில் புகைப்படத்தை வைத்து ரிப் என இரங்கல் பதிவு செய்து விட்டார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்க வில்லை. பின்னர் ஓட்ைட பிரித்து உள்ளே சென்று பார்த்த போது சண்முக சுந்தரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    • ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர், முத்துசாமி கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ரம்யா (வயது 23) மற்றும் திவ்யா (17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ரம்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திவ்யா அவரது அக்கா ரம்யா வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது தாயார் மகேஸ்வரி 2-வது திருமணம் செய்தது பிடிக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
    • பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது,

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவகுமார் . இவரது மகள் சத்யா(வயது 17). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், சத்யா தனியார் பள்ளியில் படிக்க விரும்பாமல் தோழிகளுடன் சேர்ந்து அரசு பள்ளியில் படிக்க விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சத்யா பள்ளிக்குச் செல்லவில்லை.

    இதனால் பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சத்யா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொன்னமராவதியில் ஓய்வுபெற்ற கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை ;

    பொன்னமராவதி பூக்குடி வீதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 64). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தங்கமணி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தங்கமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சசிகலா(வயது 45). இவர்களுக்கு திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சசிகலா மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கரூர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதனை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் பகுதியை ேசர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு கீதா (26), சந்தியா (24) என்ற மகள்கள் உள்ளனர். இதில், கீதா பி.இ. பட்டதாரி ஆவார். சந்தியா பேஷன் டெக்னாலஜி டிசைனராக உள்ளார். கரூர் மாவட்டம் தும்பிவாடியை சேர்ந்த வேலவன் (30) என்பவருக்கும், கீதாவிற்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளார். இந்த தம்பதிக்கு சிவதர்ஷிபா என்ற 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கீதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் புன்னம் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீதா தூக்குப்போட்டு கொண்டார்.இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கீதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கரூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் தனவேல். இவரது மகன் பிரசாத் (வயது35). இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை இவரது மனைவி திலகவதியும், தந்தை தனவேலும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரசாத் கேனில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பிரசாத் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சபரிகிரி (வயது27). தனியார் கம்பெணியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் சபரிகிரிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி கண்டித்ததால் சபரிகிரி மன வேதனையுடன் இருந்து வந்தார். இதையடுத்து கயல்விழி குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்ப வந்து வீட்டின் கதவை திறந்த போது கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டியும் சபரிகிரி திறக்காதால் கயல்விழி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சபரிகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    திருச்சி தெற்கு தாராநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் திவாகர் (வயது 21). இவர் குடிப்பழக்கம் உடையவர். இவர் ஒரு வழக்கில் திருச்சி நீதிமன்றம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த திவாகர், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் தீபராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). கொத்தனார். இவர் தற்போது அன்னவாசல் என்.எஸ்.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தார். இவரும், கனிமொழி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் தற்போது கழுவந்தோண்டி கிராமத்தில் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி அனிதா(வயது 30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சமீப காலமாக அனிதாவுக்கு தற்கொலை எண்ணம் வருவதாக கூறி புலம்பி வந்துள்ளார். தொடர்பாக அனிதாவின் பெற்றோர்களுக்கு, இளையராஜா தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவரிடம் அனிதா அழைத்து செல்லப்பட்டு உள்ளார். மனநல மருத்துவம் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனது இ-சேவை மையத்திற்கு இளையராஜா செல்லும்போது, பள்ளி விடுமுறை காலம் என்பதால் தனது மகனையும் தன்னோடு இ-சேவை மையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

    மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்து திறக்காததால், சந்தேகம் அடைந்த இளையராஜா, ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார்.அப்போது அவரது மனைவி அனிதா வீட்டிற்குள் தூக்கு போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த இளையராஜா அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்கள் உதவியுடன் பின் பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை மீட்டுள்ளனர்.

    அங்கிருந்து ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இளையராஜா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    ×