உள்ளூர் செய்திகள்
தொழிலாளியிடம் செயின் பறித்த பிரபல ரவுடி கைது
- சரவணன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும், பணத்தையும் பறித்துக் கொண்டார்.
- சரவணன் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பொம்மனை செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 47). ெதாழிலாளி. இவர் நேற்று நெத்திமேடு அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அன்னதானப்பட்டி திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குருவி பாபு (48), கத்தி முனையில் சரவணன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும், பணத்தையும் பறித்துக் கொண்டார்.இதுகுறித்து சரவணன் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குருவி பாபுவை கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.