உள்ளூர் செய்திகள்

கோவையில் புதுப்பெண் தற்கொலை

Published On 2022-07-04 09:45 GMT   |   Update On 2022-07-04 09:45 GMT
  • பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

கோவை:

கோவை நீலாம்பூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 26). தொழிலாளி. இவருக்கும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜீவஜெயந்தி (21) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது அவர் ஜீவஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டு திட்டினார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

நேற்று வீட்டில் இருந்த அவர் விரக்தி அடைந்து திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜீவஜெயந்தியை மீட்டார்.

ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். பின்னர் இதுகுறித்து பத்மநாபன் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவஜெயந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. திருமணமான 10 மாதத்தில் புது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News