உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் கோவிலுக்கு சென்ற மூதாட்டி மாயம்
- திருவெண்ணைநல்லூர் கோவிலுக்கு சென்ற மூதாட்டி மாயமானார்.
- சுசிலாவின் மகன் அப்புசாமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் இந்திரா வீதி நகரைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 80) சம்பவத்தன்று இவர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்ப வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் சுசிலாவின் மகன் அப்புசாமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.