உள்ளூர் செய்திகள்

சென்னையில் மழை நீர் தேக்கத்துக்கு தீர்வு காணப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-06-09 08:04 GMT   |   Update On 2022-06-09 08:04 GMT
  • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
  • வருகிற பருவமழையின்போது மழைநீர் தேங்காத நிலை ஏற்படுத்தப்படும்.

சென்னை:

வளசரவாக்கம் பகுதியில் ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் ஏற்படும் மழை நீர் தேக்கத்துக்கு தீர்வு காண்பதற்கு கடந்த ஆட்சி காலத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. வடிகால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவது, இணைப்புகள் இல்லாத இடங்களில் இணைப்புகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை நிறைவேற்றவில்லை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்து தீர்வுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து இடங்களிலும் பணிகள் நடக்கிறது.

வருகிற பருவமழையின்போது மழைநீர் தேங்காத நிலை ஏற்படுத்தப்படும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 72 லட்சத்து 87 ஆயிரத்து 659 பேருக்கு இலவச மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, கணபதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News