பாளையில் மளிகை கடைக்காரர் 'திடீர்' சாவு
- பாளை வி.எம். சத்திரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
- அய்யப்பனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதைக் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நெல்லை:
பாளை வி.எம். சத்திரம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். தற்போது பள்ளிக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் அய்யப்பனின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராமானுஜம் புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை அய்யப்பன் கடையை திறக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அய்யப்பனை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார்
.இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், அய்யப்பனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதைக் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.