உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள்.

கொடைக்கானல் மேல்மலையில் மருத்துவமுகாம்

Published On 2022-08-17 05:45 GMT   |   Update On 2022-08-17 05:45 GMT
  • திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு சார்பாக கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் மருத்துவ முகாம்நடைபெற்றது
  • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு சார்பாக கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் மருத்துவ முகாம்நடைபெற்றது.

மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் ஸ்ரீகலா தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மதன்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மருத்துவப் பிரிவு மாநிலச்செயலாளர் டாக்டர் அரவிந்த் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வும், இலவசமாக 205 கோடி ஊசிகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News