உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-03 09:31 GMT   |   Update On 2022-08-03 09:31 GMT
  • மின் கட்டண உயர்வை கண்டித்து நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
  • பேரணியாக தப்பு மேளம் அடித்துக்கொண்டு புறப்பட்டு முத்துப்பேட்டை மின்சார வாரியம் சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முன்னதாக பேரூராட்சி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து கண்டன பேரணியாக தப்பு மேளம் அடித்துக்கொண்டு புறப்பட்டு முத்துப்பேட்டை மின்சாரம் வாரியம் சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, நிர்வாகிகள் கனகசுந்தரம், காளிமுத்து ஆகியோர் பேசினார்கள். இதில் நகர நிர்வாகிகள் மதிவாணன், ரமேஷ், ஜெயராமன், இந்திராணி, சரவணன், மந்திர மூர்த்தி, சாந்தி உட்பட கட்சியினர் பலரும் கலந்துக்கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News