உள்ளூர் செய்திகள்

சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது

Published On 2022-07-02 09:35 GMT   |   Update On 2022-07-02 09:35 GMT
  • மதுரையில் சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • மது போதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை

அவனியாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த குமரவேல் மகன் செல்வகுமார் (வயது 20). இவர் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சிறுமி நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார். செல்வகுமார் அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர். 

Tags:    

Similar News