உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் பஸ் மோதி பலியானார்.
- நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முத்து முனியாண்டி மகள் அமிர்தம் (26). இவர் நேற்று இரவு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல் மெயின் ரோட்டில் சென்றபோது புது விளாங்குடி அருகே, வேகமாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் அமிர்தம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அரசு பஸ் சக்கரத்தில் சிக்கியவர், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இருந்தபோதிலும் அரசு பஸ் நிற்காமல் சென்று விட்டது. அமிர்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.