உள்ளூர் செய்திகள்
கோவில் யானைக்கு 2-வது நாளாக சிகிச்சை
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2-வது நாளாக சிகிச்சை நடந்து வருகிறது.
- 2 ஆண்டுகளுக்கு முன்பு இடது கண்ணில் கண் புரை ஏற்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் யானை பார்வதி உள்ளது. இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இடது கண்ணில் கண் புரை ஏற்பட்டது. அதற்கு கால்நடை மருத்துவ துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே பார்வதி யானைக்கு அடுத்த கண்ணிலும் புரை பரவ ஆரம்பித்தது. எனவே சர்வதேச தரத்துடன் யானைக்கு சிகிச்சை வழங்குவது என்று அறநிலையத்துறை முடிவு செய்தது.
தாய்லாந்து நாட்டில் இருந்து 7 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்வதி யானைக்கு உலகளாவிய தரத்துடன் கண்புரை சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
அசாம் மற்றும் சென்னையில் இருந்தும் கால்நடை மருத்துவர்கள் மதுரை வந்துள்ளனர். அவர்களும் தாய்லாந்து டாக்டர்களுடன் இணைந்து பார்வதி யானைக்கு 2-வது நாளான இன்று கண்புரை சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.