உள்ளூர் செய்திகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
- ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
- இதைத்தொடர்ந்து அங்குள்ள ஏடகநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று என்பதால் திருப்புவனம், திருவேடகம் போன்ற சிவஸ்தலங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்கொடுத்தனர்.
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் வைகை ஆற்றில் நீராடி வைகை கரையில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து அங்குள்ள ஏடகநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.