உள்ளூர் செய்திகள்
- சங்கிலியை பறித்தவர் கைதானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக் அலியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல கைலாசநாதபுரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (40). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் புது எல்லிஸ் நகர், காந்திஜி காலனியைச் சேர்ந்த சம்சுதீன் மகன் முபாரக் அலி (24) வெள்ளி சங்கிலி பறித்து தப்ப முயன்றார்.
அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக் அலியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.