உள்ளூர் செய்திகள்

வருகிற 4-ந் தேதி மின்தடை

Published On 2022-07-02 09:51 GMT   |   Update On 2022-07-02 09:51 GMT
  • மதுரை மாடக்குளம் பகுதியில் 4-ந்தேதி மின்தடை ஏற்படும்.
  • அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை

அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பசுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற உள்ளதால் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள்நகர், அவர்லேடிபள்ளி, காயத்திரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர், சவுபாக்கியா நகர், துர்கா நகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி. நகர், அமைதிசோலை, சுந்தர்நகர், ஜே.ஜே.நகர், ஹார்விபட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News