பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்
- மதுரையில் பஸ்சுக்காக பயணிகள் நீண்டநேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
- தனியார் டவுன் பஸ்களை இயக்க கோரி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரையில் அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பிற நகரங்கள் போல் தனியார் டவுன் பஸ்கள் இயக்க மதுரையில் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் மதுரை சுற்றுவட்டார மக்களும், மதுரை நகர மக்களும், மதுரைக்கு வரும் மக்களும் அரசு டவுன் பஸ்களையே நம்பி உள்ளனர்.
அரசு டவுன் பஸ்களில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.
குறிப்பாக பரவை, வாடிப்பட்டி, அண்ணா பஸ் நிலையம், பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
ஒரே வழித்தடத்தில் குறைந்த அளவு பயணிகளுடன் இருக்கைகள் காலியாக அதிக அளவில் தொடந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
எனவே பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் மதுரையில் தனியார் டவுன் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.