உள்ளூர் செய்திகள்

மதுரை-திண்டுக்கல் இடையே பயணிகள் ரெயில்

Published On 2022-06-28 09:41 GMT   |   Update On 2022-06-28 09:41 GMT
  • மதுரை-திண்டுக்கல் இடையே பயணிகள் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
  • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

மதுரை

மதுரை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இது கொரோனா பரவலின்போது நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகும் அந்த ரெயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் மதுரை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்தை, வருகிற 10-ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மீண்டும் தொடங்குவது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து 10-ந் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், காலை 9.20 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 7.45 மணிக்கு திண்டுக்கல் செல்லும். இந்த ரெயில்கள் அம்பாத்துரை, கொடை ரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல் நகரில் நின்று செல்லும்.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News