உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர்கள் சாவு

Published On 2022-07-05 07:54 GMT   |   Update On 2022-07-05 07:54 GMT
  • வாகனம் மோதி முதியவர்கள் பலியானார்.
  • டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் பிள்ளையார் பாண்டி(78). இவர் தேனீர் அருந்துவதற்காக மதுரை-ராஜபாளையம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(80). இவர் வடக்கு காலனி பகுதியில் உள்ள உறவினரை பார்த்து விட்டு திருமங்கலம்- கொல்லம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

எம்.சுப்புலாபுரம் விநாயகர் கோவில் எதிரே நடந்து வந்தபோது சலுப்பபட்டியை சேர்ந்த கோபால்(50) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் ஈஸ்வரனை ஆட்டோ மூலம் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈஸ்வரன் மகன் சீனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கோபால் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News