உள்ளூர் செய்திகள்
நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா
- மதுரை மாவட்டம் பொதும்பு ஊராட்சியில் அமைந்துள்ள ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை குருநாதன் சேர்வை வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர், பொதும்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பொதும்பு ஊராட்சியில் அமைந்துள்ள ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. புதிதாக அமைக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் சன்னதி, ஆண்டாள் சன்னதி, நவகிரக சன்னதிகளின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
4 கால யாக பூஜையுடன் மகா சங்கல்பம், வாஸ்து ஹோமம், மகா பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி கோபுர விமானங்களுக்கு புனித தீர்த்தங்கள் கொண்டு செல்லப்பட்டு மகா சம்ப்ரோசனம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை குருநாதன் சேர்வை வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர், பொதும்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.