உள்ளூர் செய்திகள்
மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி, வேலப்ப அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.