உள்ளூர் செய்திகள்
- மதுரை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
- உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி ஆசிட் குடித்து மயங்கி விழுந்தார்.
மதுரை
பைகாரா பால நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு வயிற்று வலி தொல்லை இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணம் ஆகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜ் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவனியாபுரம், அண்ணா நகர், கண்ணதாசன் தெருவை சேர்ந்த நவநாதன் மனைவி அங்கம்மாள் (75). இவருக்கு தீராத உடல் நலக்குறைவு இருந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அங்கம்மாள், ஆசிட் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.