உள்ளூர் செய்திகள்
- மனைவி தற்கொலை வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருக்கும் ஜெயலட்சுமி(40) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகேஷ், சந்தோஷ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 2-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ரமேஷ் கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ஜெயலட்சுமி விட்டத்தில் உள்ள ஊக்கில் சேலையில் தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி உத்தரவின்பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயலட்சுமியின் கணவர் ரமேசை கைது செய்தனர்.