உள்ளூர் செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.36 லட்சம் மோசடி

Published On 2022-08-23 08:15 GMT   |   Update On 2022-08-23 08:15 GMT
  • போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.36 லட்சம் மோசடி செய்த மனைவியுடன் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
  • இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இதுகுறித்து மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

மதுரை

மதுரை பொன்மேனி பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் பாபு (வயது 46). இவர் ரெடிமேட் ஆடைகள் தொடர்புடைய வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடல்புதூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரெயிலார் காலனியை சேர்ந்த எபி ஸ்டான்லி , அவரது மனைவி சகிலா ஆகியோர் பாபுவுக்கு அறிமுகம் ஆனார்கள்.

அப்போது ஒப்பந்த அடிப்படையில் பாபு ரெடிமேட் தொடர்பான உபபொருட்களை எபி ஸ்டான்லி-சகிலா கார்மெண்ட்ஸ் நிறுவத்திற்கு சப்ளை செய்தார். இதன் மூலம் பாபுவுக்கு அந்த தம்பதி ரூ.36 லட்சம் தர வேண்டி இருந்தது. அவர் பணத்தை பல முறை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தராமல் இழுத்தடித்தனர். இந்த நிலையில் எபி ஸ்டான்லி-சகிலா தம்பதியினர் பாபுவுக்கு பணம் கொடுத்தது போல் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.36 லட்சத்தை மோசடி செய்ய முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இதுகுறித்து மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது எபி ஸ்டான்லி-சகிலா ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News