உள்ளூர் செய்திகள்

நள்ளிரவில் வங்கியை திறந்த ஊழியர்கள். 

அரசு வங்கியில் இரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

Published On 2022-06-18 09:36 GMT   |   Update On 2022-06-18 09:36 GMT
  • அரசு வங்கியில் இரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுரை மெயின்ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பணி முடித்து ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென வங்கியின் அலாரம் அலறத் தொடங்கியது. தொடர்ந்து அலாரம் அடிக்கவே அந்தப்பகுதி மக்கள் இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.

இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்து வங்கியை திறந்து பார்த்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலாரம் அடித்தபடியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தினர்.

இந்த சம்பவம் நேற்று இரவு திருமங்கலம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News