உள்ளூர் செய்திகள்
- திருப்பரங்குன்றத்தில் வீடு, வீடாக தேசியக்கொடி வழங்கப்பட்டது.
- வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினர்.
திருப்பரங்குன்றம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி மத்திய, மாநில அரசுகள் அதனை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ், உதவி ஆணையர் சையது முஸ்தபா கமல் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் நகர் பகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினர்.