- திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை, மோடி அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமங்கலம்
ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை மற்றும் மோடி அரசை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, திருமங்கலம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயராம், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கரிசல்பட்டி சவுந்திரபாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் முருகேசன், சங்கன், தளபதி சேகர், பாண்டியன், வீரபுத்தி ரன், உசிலம்பட்டி நகர் தலைவர் மகேந்திரன், துணைத்த லைவர் சரவணன், நகர செயலாளர் ராஜா தேசிங், கவுன்சிலர் அமுதா சரவணன், முன்னாள் நகர் தலைவர் தாமோதரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.