உள்ளூர் செய்திகள்

பட்டாபிஷேக நிகழ்ச்சி

Published On 2023-05-07 08:08 GMT   |   Update On 2023-05-07 08:08 GMT
  • சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் நடந்தது.
  • தமிழாசிரியர் ராமகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.

சோழவந்தான்

சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் தீர்த்த வாரி திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அக்னி கரகம் கோவிலாளர் வீட்டுக்கு சென்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நடந்தது.

மாலையில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. அம்மன் வைகை ஆற்றுக்குச் சென்று தீர்த்தமாடி கோவில் வளாகத்தில் பூ அலங்காரத்துடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாலை ரிஷப வாகனத்தில் அம்மன் பவனி வந்தது. நேற்று மாலை பட்டாபிஷேகம் நடந்தது.

இதில் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராம கிருஷ்ணன் பட்டாபிஷே சொற்பொழிவாற்றினார்.

Tags:    

Similar News