உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் கூட்டம்

Published On 2023-04-22 08:33 GMT   |   Update On 2023-04-22 08:33 GMT
  • விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
  • சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

மேலூர்

மேலூர் சந்தைப் பேட்டையில் விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆறுமுகம் ஆசாரி, கோவில் பூசாரி தனபாலன், நிர்வாக குழு மூத்த உறுப்பினர் சண்முகம், கேசவன் முன்னிலை வகித்தனர். கோவிலின் செயலாளர் கேசவராஜா, பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் சக்திவேல் முருகன், துணைச் செயலாளர் பிச்சை பாண்டி, இளைஞரணி செயலாளர் நளன், மகளிரணி செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் விஸ்வகர்மா சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவிலில் வருகிற ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News