உள்ளூர் செய்திகள்
- ரெயில்வே ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
- சிறப்பாக பணிபுரிந்த உதவி சிக்னல் தொலை தொடர்பு பொறியாளர் அசோக் உட்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
மதுரை
மதுரையில் ெரயில்வே கோட்ட வார விழா நடந்தது. இதில் தலைமை முதன்மை சிக்னல் தொலை தொடர்பு பொறியாளர் மதுசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த உதவி சிக்னல் தொலை தொடர்பு பொறியாளர் அசோக் உட்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட சிக்னல் தொலை தொடர்பு என்ஜினீ யர்கள் ராம்பிரசாத், குகுலோத் யுகேந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.