உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-04 07:35 GMT   |   Update On 2023-09-04 07:35 GMT
  • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

வாடிப்பட்டி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடந்தது. வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

"ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். அதில் பல ஆச்சரியங்கள் இருக்கப் போகிறது.

இதை உங்களை போல் நானும் எதிர்பார்த்து கொண்டிருக்கி றேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று வெற்றிக கனியை பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், சிங்கராஜ், பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் துணைச் செயலாளர் சந்தனத் துரை, பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், கோட்டைமேடு பாலன் உள்பட கலர் கலந்து கொண்டனர். முடிவில் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News