search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. நிர்வாகிகள்"

    • பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
    • கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார்

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் கூட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகி அட்சய கண்ணன், மாநில விவசாய அணி தானு பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச்செயலாளர் பகவதியப்பன் மற்றும் தோவாளை பகுதியை சேர்ந்த விவசாய அணி முத்துசாமி, சிவச்சந்திரன், ராஜேந்திரன், மது, ராஜன், சரிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக., 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் கொடியேற்று விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடந்தது. வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். அதில் பல ஆச்சரியங்கள் இருக்கப் போகிறது.

    இதை உங்களை போல் நானும் எதிர்பார்த்து கொண்டிருக்கி றேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று வெற்றிக கனியை பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், சிங்கராஜ், பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் துணைச் செயலாளர் சந்தனத் துரை, பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், கோட்டைமேடு பாலன் உள்பட கலர் கலந்து கொண்டனர். முடிவில் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச்செயலா ளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தள வாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற இருக்கின்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சிவசெல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்டு 20 -ந்தேதி நடைபெறும் மாநாட்டில் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்வது குறித்தும், மாநாடு செல்வது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்து வருகிற 2-ந்தேதி நாகர்கோவிலில் நடைபெறும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் பொன் சுந்தர் நாத், வீராசாமி, ராஜ்குமார், பொன்சேகர், ராதா கிருஷ்ணன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், கவுன்சிலர் ஆறுமுகராஜா, அணி செயலாளர்கள் ராஜாராம், சுகுமாரன், மனோகரன், முன்னாள் நகர செயலாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர்ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர்ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி வாழ்த்து தெரிவிப்பது தொடர்பாகவும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து நாளை (2-ந்தேதி) மாலை 6 மணிக்கு பனகல் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அவைத்தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்குகிறார்.

    நான் (செல்லூர் ராஜூ) கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறேன். எனவே கூட்டத்தில் மாவட்ட, தொகுதி, பகுதி, வட்ட நிர்வாகிகள், பேரவை, இளைஞரணி, மகளிரணி, பாசறை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

    தாராபுரம் :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு புறப்பட்டார்.

    உற்சாக வரவேற்பு :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் வழியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று முதல் முறையாக வருகை தந்ததால் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

    பிளக்ஸ் பேனர்கள் :

    தாராபுரம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி உடுமலை ரவுண்டானாவில் இருந்து அமராவதி சிலை வரை தாராபுரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமி வருகையால் தாராபுரம், காங்கயம் நகரம் இன்று விழாக்கோலம் பூண்டன. காங்கயம் நகர்ப்பகுதி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே பெரிய அளவில் 40 அடி நீள பேனரும், மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக எடப்பாடி பழனி சென்றதால் அந்த சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக .அதி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
    அவினாசி:

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவினாசி தொகுதி எம்.எல்ஏ. ப.தனபால், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன் (அவினாசி மேற்கு), சேவூர் ஜி.வேலுசாமி (வடக்கு), மு.சுப்பிரமணியம். ( தெற்கு), மாவட்ட இணை செயலாளர் எஸ்.லதா, அவினாசி, பூண்டி நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிரணியினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

    எம்.எல்.ஏ. தனபால் பேசுகையில், பேரூராட்சியை கைப்பற்ற அனைத்து நிர்வாகிகளும் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். அவினாசி பேரூராட்சி 18 வார்டுகளிலும் நல்ல வேட்பாளர்களை நிறுத்தி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பேரூராட்சியை கைப்பற்ற முடியும். 

    மேலும் அ.தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் மக்களிடத்தில் மாற்றம் வருவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். காங்கயம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கயம் நகர அ.தி.மு.க. செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார். சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றார். இதில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×