search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    நாகர்கோவிலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச்செயலா ளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தள வாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற இருக்கின்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சிவசெல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்டு 20 -ந்தேதி நடைபெறும் மாநாட்டில் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்வது குறித்தும், மாநாடு செல்வது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்து வருகிற 2-ந்தேதி நாகர்கோவிலில் நடைபெறும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் பொன் சுந்தர் நாத், வீராசாமி, ராஜ்குமார், பொன்சேகர், ராதா கிருஷ்ணன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், கவுன்சிலர் ஆறுமுகராஜா, அணி செயலாளர்கள் ராஜாராம், சுகுமாரன், மனோகரன், முன்னாள் நகர செயலாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×