உள்ளூர் செய்திகள்

சாப்டூர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 62 பேர் கைது

Published On 2022-10-01 08:44 GMT   |   Update On 2022-10-01 08:44 GMT
  • சாப்டூர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மரம், செடிகளை தீ வைத்து அழித்ததாக தெரிகிறது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சாப்டூர் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி யாகும். இங்கு சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் புலிகளும் இந்த பகுதியில் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. எனவே சாப்டூர் வனப்பகுதி பாது காக்கப்பட்ட வனப்பகுதி யாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வன பகுதியில் உள்ள கேணி, வாழைத்தோப்பு, சின்ன கோட்டை, மலையாறு, பெருமாள் கோவில் மொட்டை உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மொட்டை பகுதியிலிருந்து புகை வெளியேறியது. எனவே வனப்பகுதியில் தீ பரவி இருக்கலாம் என கருதி சாப்டூர், வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வனத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. அவர்கள் அந்த வழியாக சதுரகிரி செல்ல முற்பட்ட தும், இதற்காக 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரம், செடி, புல்களுக்கு தீ வைத்து அழித்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து வனப்பகுதியில் அத்திமீறி நுழைந்ததாக 62 பேரை போலீசார் கைது செய்து பேரையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Tags:    

Similar News