உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-06-25 07:47 GMT   |   Update On 2022-06-25 07:47 GMT
  • வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் டீசல் போட்டுக் கொண்டிருந்த லாரி டிரைவரிடம் பணத்தை பறித்து விட்டு தப்பினர்.

அவனியாபுரம்

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அவனியாபுரத்தில் பெட்ரோல் பங்கு உள்ளது. இங்கு கடந்த 23-ந் தேதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் டீசல் போட்டுக் கொண்டிருந்த லாரி டிரைவரிடம் பணத்தை பறித்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து லாரி டிரைவர் குருநாதன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி ஆகியோர் தலைமையில் போலீசார் அவனியாபுரம் மாநகராட்சி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஓட முயன்றனர். அவர்களைத் துரத்திப் பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் பெட்ரோல் பங்கில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. அதில் ஒருவன் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோட்டை சேர்ந்த முருகன் மகன் ராஜு என்ற ராஜேஷ் (19) என்பதும், வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்யது இப்ராஹிம் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடி அந்த வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த முத்து மணி, முத்து ராமலிங்கம், அருண்பாண்டி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்கள் வழிப்பறி செய்த பணம் மற்றும் திருடிய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News