உள்ளூர் செய்திகள்
- மோதலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2 பேருக்கும் முன் விரோதம் உள்ளது.
மதுரை
பழங்காநத்தம், பசும்பொன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (60). இவரும் ராமலிங்க நகரை சேர்ந்த விக்னேஷ் குமார் (34) என்பவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 2 பேருக்கும் முன் விரோதம் உள்ளது. நேற்று கந்தசாமி ராமலிங்க நகருக்கு வந்தார்.
அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கந்தசாமிக்கு அடி, உதை விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கந்தசாமி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாமுவேல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.