உள்ளூர் செய்திகள்

விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2022-08-08 09:51 GMT   |   Update On 2022-08-08 09:51 GMT
  • விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மதுரை

ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெரு, என்.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது வீட்டின் அருகே, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த குமரேசன் (27) என்பவர் குடியிருந்து வருகிறார்.

குமரேசன் அழகப்பன் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த 25 வயது பெண்ணுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதை மணிகண்டன் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த குமரேசன், பெண் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் பெண் வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் ஆட்டோ டிரைவர் புகழேந்தி (53) என்பவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

ஆத்திரம் அடைந்த 25 வயது பெண், இன்னொரு ஆட்டோவில் டி.வி.எஸ் நகருக்கு சென்றார். அங்கு ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்த ஆட்டோ டிரைவர் புகழேந்தி மற்றும் அவரது மனைவிக்கு அடி- உதை விழுந்தது. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, சுகந்தி மற்றும் குமரேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News