உள்ளூர் செய்திகள்

பத்ரகாளி, திலகவதி

மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-07-22 08:48 GMT   |   Update On 2022-07-22 08:48 GMT
  • மதுரை அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயமானார்கள்.
  • இதுகுறித்து சுப்ரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மதுரை

மதுரை ஆண்டாள்புரம் ஓதுவார் மடத்தை சேர்ந்தவர் சரோஜா. இவரது சின்னம்மாள் பத்ரகாளி (வயது 80). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை.

மதுரை கீழமுத்துப்பட்டி அய்யனார்புரத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவரது மருமகள் திலகவதி (36). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பிவில்லை. இந்த 2 மாயம் தொடர்பாக சுப்ரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News