உள்ளூர் செய்திகள்

கார் மோதி 2 காவலாளிகள் சாவு

Published On 2022-09-09 08:14 GMT   |   Update On 2022-09-09 08:14 GMT
  • வெவ்வேறு சம்பவங்களில் கார் மோதி 2 காவலாளிகள் இறந்தனர்.
  • ஆஸ்டின்பட்டி மற்றும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம், சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் பாலவீரன் (வயது 40). திருப்பரங்குன்றம் கல்லூரியில் இவர் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். நேற்று இரவு கூத்தியார்குண்டு-கரடிக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அகதிகள் முகாம் அருகே, வேகமாக வந்த கார் பாலவீரன் மீது மோதியது. படுகாயம் அடைந்த பாலவீரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலக்கால் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 48). மதுரை அரசினர் மருத்துவமனையில், வாட்ச்மேனாக வேலை பார்த்தார். சம்பவத்தன்று இரவு இவர் நண்பர் வேல்முருகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மதுரை- மேலக்கால் ரோட்டில், வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துராமன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News