உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தபோது எடுத்தபடம்.


மு.க.ஸ்டாலின் தலைமையை பார்த்து தமிழகத்தில் எதிர்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2022-06-25 09:18 GMT   |   Update On 2022-06-25 09:18 GMT
  • தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
  • அனைத்து சாதி மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகம் ஆக மாற்றிஆட்சி செய்து வருகிறார்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4 -வது வார்டு அ.ம.மு.க. பெரியசாமி என்ற ஆனந்த் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் விக்னேஷ், சுரேஷ், சுரேஷ் குமார், சதீஷ், மணிகண்டன், மாரியப்பன், அற்புதராஜ் உள்பட பலர் அக்கட்சியில்இருந்து விலகி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த குறைபாடும் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து சாதி மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகம் ஆக மாற்றிஆட்சி செய்து வருகிறார்.இவரது திறமையை பார்த்து மாற்று கட்சியினர் கூட்டம் கூட்டமாக தி.மு.க.வில் இணைந்து கொண்டே இருக்கின்றனர்.

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணிவண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் ஜான் உட்பட தி.மு.க.வினர் பலர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News