உள்ளூர் செய்திகள்

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2022-06-25 07:18 GMT   |   Update On 2022-06-25 07:18 GMT
  • சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது
  • திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

கரூர்:

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு பூதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News