உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழாவில் குவியும் மக்கள்

Published On 2022-08-22 08:36 GMT   |   Update On 2022-08-22 08:36 GMT
  • புத்தக திருவிழாவில் மக்கள் குவிகின்றனர்
  • ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர்:

கரூர் திருமாநிலையூரில் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் அரங்கம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம், உணவரங்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சிந்தனை நிகழ்ச்சியில், படிப்பறிவே, பட்டறிவே என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் மண்மணம் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தகத் திருவிழாவில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை பார்வையிட்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags:    

Similar News